கேப்பாபுலவில் தற்கொலைக்கு முயற்சித்தவர் உயிரிழப்பு!

முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கோப்பாபுலவு பகுதியில் வசிக்கும் 34 அகவையுடைய நபர் தனது வீட்டிற்கு முன் உள்ள மரம் ஒன்றில் கயிற்றினை கட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் கிராம வாசிகள் அவரை காப்பாற்றி மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Admin Avatar