Friday, May 16, 2025
HomeUncategorizedமுள்ளியவளையில் வித்தினை ஏற்படுத்திய இரு இளைஞர்களும் பலி!

முள்ளியவளையில் வித்தினை ஏற்படுத்திய இரு இளைஞர்களும் பலி!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலைப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று 09.04.2024 இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த 18 அகவையுடைய திருலோகச்சந்திரன் கேதீஸ்வரன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கணுக்கேணி கிழக்கினை சேர்ந்த 41 அகவையுடைய கனகராசா நிமலன் என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுப்பிவைக்கப்பட்டுள்ளான்.

உயிரிழந்தவரின் உடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் 11.04.2024 இன்று உடலம் பூதன்வயல் கற்பூரப்புல் இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தவிபத்தில் காயமடைந்து யாழ்போதான மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றைய குடும்பஸ்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான கனகராசா நிமலன் 11.04.2024 இன்று உயிரிழந்துள்ளார்

இவரது உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு 12.04.2024 அன்று உடலம் அடக்கம் செய்யப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments