Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவு கடலில் நடைபெற்ற படகோட்ட போட்டிகள்!

ஈஸ்டர்பெருவிழாவினை முன்னிட்டு இன்று 09.04.23 உயிர்பு விழாவில் முல்லைத்தீவு பங்கு சார்ந்த இளையோர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு கடலில் படகு ஓட்டப்போட்டி முல்லைத்தீவு கடற்கரையில் நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரையில் இருந்து தீர்த்தக்கரை கடற்கரை வரை சென்றுவருதல் என படகு போட்டி நடத்தப்பட்டுள்ளது இதில் இரண்டு பிரிவுகளாக படகு வகைப்படுத்தப்பட்டுள்ளது 25 குதிரைவலுகொண்ட ஒரு பிரிவும் 40 குதிரைவலுகொண்ட மற்றும் ஒரு பிரிவாகவும் இந்த போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

இளைஞர்கள் மத்தியில் விளையாட்டினை ஊக்கிவிக்கும் நோக்கில் இந்த போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.தொடர்ந்து மாலை நிகழ்வுகளாக கப்பல்ஏந்தி மாத ஆலய முன்றலில் சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரைக்குமான பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு பங்கு இளையோர்களால் இந்த விளையாட்டு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *