Tuesday, May 6, 2025
HomeUncategorizedஉழவியந்திரம் ஓட்டி சென்ற குடும்பஸ்தர் விழுந்து உயிரிழப்பு!

உழவியந்திரம் ஓட்டி சென்ற குடும்பஸ்தர் விழுந்து உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட குரவில் பகுதியில் உழவியந்திரம் ஓட்டி சென்ற குடும்பஸ்தர் வலிப்பு வந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று 01.04.2024 இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வெள்ளப்பள்ளம் உடையார் கட்டுபகுதியினை சேர்ந்த 31 அகவையுடை இரண்டு பிள்ளைகளின் தந்தை  குரவில் பகுதியில் உழவியந்திரத்தினை ஓட்டிசென்றுள்வேளை வலிப்பு ஏற்பட்டு உழவியந்திரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் உழவியந்திரம் குறித்த சாரதியின் மேல் ஏறி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது இந்த விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு ஆதாரமருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் பிரேதபரிசேதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments