இலங்கைக்கு மேல் சூரியன் உச்சம் கொடுக்கும் காலம்!


இலங்கைக்கு மேல் சூரியன் உச்சம்கொடுக்கும் காலம் ஏப்ரல் 15 வரையான காலப்பகுதி காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது வடக்கில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகின்றது இந்த நிலையில் ஏப்ரல் 05 ஆம் திகதியான இன்று தொடக்கம் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும் என வளிமண்டலதிணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே வடக்கு கிழக்கு மாவட்டங்களில் வெப்ப நிலை தற்போது அதிகரித்து காணப்படுகின்றது சூரியனின் வெப்பம் அதிகமாகவும் காணப்படுகின்றது வயதானவர்கள்,குழந்தைகளை வைத்திருப்பவர்கள் வீடுகளில் கவனமாக வைத்துக்கொள்ளுங்கள்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *