Sunday, April 27, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில்-எதிர்வரும் 8 ஆம் திகதி பாரிய போராட்டம்!

முல்லைத்தீவில்-எதிர்வரும் 8 ஆம் திகதி பாரிய போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு எதிர்வரும் 08.03.2024 அன்று 7 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது

இந்த நிலையில் எதிர்வரும் 08 ஆம் திகதி முல்லைத்தீவு பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

இன்று 06.03.24 முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 8 ஆம் திகதி சர்வதேச மகளீர்தினம் மற்றும் 55 ஆவது ஜக்கியநாடுகள் சபைக்கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது இந்த நிலையில் பெண்கள் ஆகிய நாங்கள் எங்கள் உறவுகளை தேடிவருவதுடன் அடிமைத்தனமாகவே இலங்கையில் வாழ்ந்து வருகின்றோம் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 08 ஆம் திகதி பாரிய போராட்டம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வருகை தந்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments