Monday, April 28, 2025
HomeUncategorizedசுதந்திரபுரம் பகுதியில் வாள்வெட்டு-தாலிக்கொடியினை அபகரிப்பு!

சுதந்திரபுரம் பகுதியில் வாள்வெட்டு-தாலிக்கொடியினை அபகரிப்பு!

முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் வாள்வெட்டு-தாலிக்கொடியினை அபகரிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபும் மத்தி வாகிசன் வீதிப்பகுதியில் வாகனத்தில் வந்த வாள்வெட்டு கும்பல் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு குடும்ப பெண்ணின் தாலிகொடி ஒன்றினையும் அபகரித்து சென்றுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 22.02.2024 அன்று இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தின் உறவினர்களிடையே ஏற்பட்ட முரண்பாடு வாள்வெட்டில் முடிந்துள்ளது. சுதந்திரபுரம் மத்தி வாகிசன் வீதிப்பகுதியில் டொல்பின் வாகத்தில் முகத்தினை மறைந்து வந்த கும்பல் அந்த பகுதியினை சேர்ந்த 27 அகவையுடைய நபர் ஒருவர் மீது சாரமாரியா வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு அவரின் உறவினர் ஒருவரான குடும்ப பெண்ணின் கழுத்தில் இருந்து 8 பவுண் தாலிக்கொடியினையும் அபகரித்து சென்றுள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் வாள்வெட்டிற்க இலக்கான குடும்பஸ்தர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்வத்துடன் தொடர்புடைய இருவரை பொலீசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

கிராமத்தில் ஒரோ குடும்பத்தினை சேர்ந்தவர்கள் வீடுகளில் வாள்களை வைத்து அயலில் உள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இவர்களால் கிராமத்தில் வாளமுடியாத நிலை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த வாள்வெட்டிற்காக வானத்தில் வந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பிலும் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments