புதுக்குடியிருப்பில் ஆமையுடன் ஒருவர் கைது!

25.02.2024 இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டத்திற்கு விரோதமாக ஆமையினை இறைச்சிக்காக கொண்டு சென்ற நபரையும் ஆமையினையும் புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

நீண்டநாட்களாக ஆமையினை பிடித்து இறச்சிக்காக விற்பனை செய்துவரும் நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

32 அகவையுடைய 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த நபரையே கைதுசெய்துள்ளதுடன் அவரிடம் இருந்த ஆமையினையும் மீட்டுள்ளார்கள்.
சான்று பொருளையும் சந்தேக நபரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்

Admin Avatar