Monday, April 28, 2025
HomeUncategorizedஏ9 வீதியில் விபத்து படையினர் உள்ளிட்ட அறுவர் காயம்!

ஏ9 வீதியில் விபத்து படையினர் உள்ளிட்ட அறுவர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்ட ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவத்தரப்பினை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அறுவர் காயமடைந்துள்ளார்கள்.
இன்று மாலை கொக்காவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொக்காவில் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த அரசபேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் இந்த விபத்தினை சந்தித்துள்ளது.

விபத்தில் அரச பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்துள்ளதுடன் இராணுவத்தினரை ஏற்றிசென்ற வாகனம் கொக்காவில் பகுதியில் இருந்து இரணைமடு குளப்பக்கம் செல்லும் இராணுவ முகாம் வீதிக்குள் புரண்டு காணப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் அரச பேருந்தின் சாரதி மாறும் இராணுவ வாகனத்தில் பயணித்த 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளார்கள்.

விபத்து தொடர்பில் இராணுவ பொலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதுடன் முறுகண்டி பொலீசாரும் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments