பெண்தொழில் முயற்சியாளர்களின் சந்தைப்படுத்தல் கண்காட்சி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்கிவிக்கும் நோக்கில் கிறிசலிஸ் நிறுவத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இணைந்து நடத்தும் சந்தைப்படுத்தல் கண்காட்சியும் விற்பனையும் நாளை 27.01.2024 முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்கிவிப்பதற்கும் உங்களுக்கு தேவையான உள்ளுர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்துகொள்வதற்குமான அரியவாய்ப்பா இது அமைந்துள்ளது.

இந்த கண்காட்சியில் ஆடைகள்,உணவு உற்பத்தி பொருட்கள்,மட்பாண்டங்கள்,பனைசார் உற்பத்திகள் போன்ற பல்வேறு உள்ளுர் உற்பத்தி பொருட்கள் நியாயமான விலையில் விற்பனையாகும் என்றும் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மக்கள் இந்த விற்பனை கண்காட்சியில் கலந்து கொண்டு உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்கிவிக்குமாறு அறிவித்துள்ளார்கள். கிறிசலிஸ் நிறுவனம் மாவட்டசெயலகம் முல்லைத்தீவு.

Tagged in :

Admin Avatar

More for you