முல்லைத்தீவில் கரைஒதுங்கிய பங்களாதேஷ் நாட்டவரின் உடலம்!

முல்லைத்தீவு முள்ளியாவய்க்கால் கடற்கரை பகுதியில் இன்று 19.01.2024 காலை அடையாளம் காணமுடியாத நிலையில் உடலம் ஒன்று மிதப்பங்களில் மிதந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் இராணுவமுகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் குறித்த உடலம் கரைஒதுங்கியுள்ளது.

உடலம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு பொலீசார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைய முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி றொகான் உடலத்தின் தடையங்களை பரிசோதனை செய்துள்ளார்.

இதன்போது உடலத்தின் உள்ள பை ஒன்றில் பங்களாதேஷ் நாட்டு பணம் காணப்பட்டுள்ளதால் உடலம் பங்களாதேஷ் நாட்டவரின் என இனம் காணப்பட்டுள்ளதுடன்

குறித்த உடலத்தினை மாவட்ட மருத்துவமனை பிரேத பரிசேதனை அறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் இது குறித்த குறித்த பங்களாதேஷ் மற்றும் இந்தியா நாட்டு தூதரகங்களுக்கு தகவல் தெரியப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tagged in :

Admin Avatar

More for you