இரணைமடு வாய்காலுக்குள் சீறி பாய்ந்த மோட்டார் சைக்கில் இருவர் பலி!

கிளிநொச்சியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் முதன்மை வீதியில் பன்னங்கண்டி பகுதியில் இரணைமடு குளுத்தின் பிரதான வாய்காலுக்குள் மோட்டர்சைக்கில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து பாய்ந்ததில் அதில் பயணித்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்துள்ளார்கள்.இந்த சம்பவம் 13.01.2024 அன்று இடம்பெற்றுள்ளது.

அதிகப்படியான வேகமே இந்த உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது
உயிரிழந்த இளைஞர்கள் இராமநாதபுரம் கல்மடு நகர் பகுதியினை சேர்ந்த தயாளன் தனுசன் மற்றும் இராமநாதபுரம் அழகாபுரி பகுதியினை சேர்ந்த கிருஸ்ணன் சதீசன் இன்ற இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழந்தவர்களின் உடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மருத்துவபரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Tagged in :

Admin Avatar

More for you