Wednesday, May 14, 2025
HomeUncategorizedமாணிக்கபுரம் பகுதியில் வாள்,கஞ்சா,ஐஸ் உடன் ஒருவர் கைது!

மாணிக்கபுரம் பகுதியில் வாள்,கஞ்சா,ஐஸ் உடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் வாள் மற்றும் போதைப்பொருள்களுடன் சந்தேக நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

05.01.24 இன்று மாலை குறித்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யதவேளை அவரிடம் இருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஞ்சா,ஐஸ் போதைப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மாணிக்கபுரம் பகுதியினை சேர்ந்த 29 அகவையுடைய நபரே பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பொதிசெய்யப்பட்ட கஞ்சா பொதிகள் நான்கும்,ஐஸ் போதைப்பொருள் 600 மில்லிக்கிராம் என்பன மீட்கப்பட்டுள்ள.

சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments