Wednesday, May 14, 2025
HomeUncategorizedபுதுக்குடியிருப்பில் 45 லீற்றர் கசிப்புமீட்பு-சூத்திரதாரிகள் தப்பி ஓட்டம்!

புதுக்குடியிருப்பில் 45 லீற்றர் கசிப்புமீட்பு-சூத்திரதாரிகள் தப்பி ஓட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் திம்பிலி பகுதியில் சட்டவிரோத கசிப்பு வியாபாரம் இடம்பெற்று வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கிராம அபிவிருத்தி சங்கம்,கோம்பாவில் கிராம சேவையாளர் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து கிராமத்தில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

இதன்போது திம்பிலி பகுதியில் உள்ள பற்றைக்காடு ஒன்றில் 45 லீற்றர் கசிப்பு பொலீத்தீன் பையி;ல் கட்டப்பட்ட நிலையில் சூழ்ச்சியான முறையில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
விற்பனைக்காக வேறு இடத்திற்கு கடத்தி செல்வதற்காக தயார் நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இதில் சந்தேக நபர் என எவரும் கைதுசெய்யப்படவில்லை கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments