Wednesday, May 14, 2025
HomeUncategorizedநாவல்காட்டு பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 5பேர் கைது!

நாவல்காட்டு பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 5பேர் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டுப்பகுதியில் இந்தியாவில் இருந்து வருகைதந்த மூவர் உள்ளிட்ட 5பேர் புதையல் தோண்ட முற்பட்ட போது முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் கடந்த 19.12.2023 அன்று இடம்பெற்றுள்ளது.
முள்ளியவளை  நாவல்காட்டுப்பகுதியில் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக தெரிவித்து இந்தியாவினை சேர்ந்த மூவரை அழைத்து புதையல் தோண்டுவதற்கான பணிகள் முன்னெடுத்தவேளை நாவல்காட்டு பகுதியினை சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஜந்துபேரும் புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பொருட்களும் முள்ளியவளை பொலீசாரால் மீட்கப்பட்டு கடந்த 21.12.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments