Wednesday, May 14, 2025
HomeUncategorizedபழம்பாசி கிராம பிரிவில் 65 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

பழம்பாசி கிராம பிரிவில் 65 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட பழம்பாசி கிராம அலுவலர் பிரிவில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட தொடர் வெள்ளம் காரணமாக வேலைகளுக்கு செல்ல முடியாத நாளாந்த கூலித்தொழிலாளர் குடும்பங்களை உள்ளடக்கி தெரிவுசெய்யப்பட்ட 65 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது 

தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தினால் ஒரு குடும்பத்துக்கு தலா 3000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது

தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் ஜீவரத்தினம் தலைமையில் பழம்பாசி கிராம அலுவலர் இராசையா பகீரதன் பழம்பாசி கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சண்முகசுந்தரம் ஜதீஸ் ஆகியோர் கலந்து கொண்டு உலர்உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வைத்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments