Monday, May 5, 2025
HomeUncategorizedமின்சாரம் தடைப்பட்ட நேரம் பாடசாலை கமராக்களை திருடிய திருடர்கள்!

மின்சாரம் தடைப்பட்ட நேரம் பாடசாலை கமராக்களை திருடிய திருடர்கள்!

மின்சாரம் நின்றதை பயன்படுத்தி பாடசாலையில் சி.சி.ரிவி கமராங்களை திருடிய திருடர்கள்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதசத்தில் உடையார் கட்டு குரவில் கிராமத்தில் உள்ள குரவில் தமிழ் வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை நாடுமுழுவதும் இடம்பெற்ற மின்சார தடையினை பயன்படுத்தி பாடசாலையில் உள்ள சி.சி.ரி.வி கமராங்களை திருடர்கள் திருடியுள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குரவில் தமிழ் வித்தியாலயத்திற்கு 7 சி.சி.ரிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன பாடசாலையின் பாதுகாப்பு கருதி இந்த கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த 09.12.23 அன்று இரவு மின்சாரம் நீண்ட நேரம் தடைப்பட்ட நிலையில் அனைத்து கமராக்களையும் திருடர்கள் திருடி சென்றுள்ளார்கள் இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினால் வலயத்திற்கும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments