முல்லைத்தீவில்-முறிப்பு குளம் வான்பாய்கின்றது!


முல்லைத்தீவில் தொடர்சியாக பெய்துவரும் மழை காரணமாக கணுக்கேணிக்குளம்(முறிப்பு)வான்பாய்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திலும் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகிவருகின்றது.
இந்த நிலையில் முள்ளியவளை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட கணுக்கேணி குளம் எனப்படும் முறிப்பு குளம் வான்பாயதொடங்கியுள்ளது.

தொடர்ந்து மழை நீடிக்குமாயின் நீர்வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பாக்கப்படுகின்றது. பாதிப்பு ஏற்படக்கூடிய மக்கள் வாழும் பகுதிகளில் முன்எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *