ஆசிரியருக்கு தாக்குதல் நடத்திய பெற்றோர்-ஆசிரியர் மருத்துவமனையில்!

வடக்கில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் மாணவியைக் ஆசிரியர் கண்டித்ததால் மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று 03.10.23 யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாணவி பாடசாலையில் வரவு குறைவாக காணப்பட்டுள்ளது இதனை குறித்த ஆசிரியர் மாணவியினை கண்டித்துள்ளதாக தெரியவந்துள்ளது மாணவி தனது தந்தைக்கு ஆசிரியர் கண்டித்த விடையத்தினை தெரியப்படுத்தியபோது தந்தையும் அவரது நண்பர் ஒருவரும் பாடசாலை வாசலில் ஆசிரியர் வெளியில் வரும்வரை காத்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள்

இதில் காயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்திய இருவரும் பருத்தித்துறை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வுருகின்றன.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையிலும் நீங்கள் அக்றையாக இருங்கள் பாடசாலையில் ஒரு ஆசிரியர் மாணவர்களை கண்டிப்பது அவர்களை நல்வளிப்படுத்த முயல்வது எல்லாம் அவர்களின் நன்மைக்கே என்பதை புரிந்து கொள்ளுங்கள் இவ்வாறான செயற்பாடுகளை துக்கிக்கொண்டு றவுடிகளை விட்டு விரட்டுவதும் அடிதடியில் ஈடுபடுவதும் உங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையை எதிர்காலத்தில் பாதிக்க செய்யும் செயல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

Tagged in :

Admin Avatar

More for you