Tuesday, May 6, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் தவறுதலான வெடிவிபத்தில் படையினன் காயம்!

முல்லைத்தீவில் தவறுதலான வெடிவிபத்தில் படையினன் காயம்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று செவ்வாய்க்கிழமை (03) மாலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு நாயாறு பகுதியிலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தவறுதலாக இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காலில் சிறு காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மாவட்ட வைத்தியசாலையின் ஐந்தாவது விடுதியில் சிகிச்சை பெற்று வரும் குறித்த படையினன் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இராணுவ போலீசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments