முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்!


முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்குஉட்பட்ட நெடுங்கேணி தண்ணீரூற்று வீதியில் எரிபொருள் ஏற்றிவந்த பௌசர் ஒன்ற வீதியினை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியில் மதவாளசிங்கன் குளத்திற்கு செல்லும் பகுதிக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது கொழும்பில் இருந்து எரிபொருள் ஏற்றிவந்த பௌசர் ஒன்று சாரதியின் கவன குறைவினால் வீதியினை விட்டு விலகி வடிகாலுக்குள் சென்று விபத்தினை சந்தித்துள்ளது இந்த விபத்தில் வாகன சாரதி மற்றும் நடத்துனர்கள் எதுவித பாதிப்பும் இன்றி தப்பியுள்ளதுடன் வாகனத்திற்கு சிறிதளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இன்று மாலை 3ஆம் கட்டை பகுதியில் இருந்து முல்லைத்தீவு செல்லும் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *