யானை உயிரிழந்தமை காணி உரிமையாளர் கைது 14 நாட்கள் விளக்கமறியலில்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கனகரத்தினபுரம் பகுதியில் விவசாயிஒருவரால் பாதுகாப்புக்காகபொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கிய காட்டுயானை ஒன்று கடந்த 23.09.23 அன்று உயிரிழந்துள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் மருத்துவர்குழுவினர் 24.09.23 அன்று சென்று பார்வையிட்டு மின்சாரம் தாக்கியே யானை உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்தை தொடர்ந்து யானையின் உடலம் அன்றே புதைக்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெத்துள்ளார்கள்.

இந்த சம்பவத்தில் மின்சார வேலியினை அமைத்து அனுமதியற்ற முறையில் வேலியில் மின்சாரம் பாச்சியமை தெரியவந்துள்ளது.

குறித்த காணியின் உரிமையாளரான 03 ஆம் கண்டம் மன்னாகண்டல் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 63 அகவையுடைய குடும்பஸ்தரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கைதுசெய்து 27.09.23 இன்று முல்லைத்தீவு மாங்குளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.

குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதுடன் இது தொடர்பிலான வழக்கு விசாரணை ஜப்பசி மாதம் 11 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது .

 35 வயது மதிக்கத்தக்க 9அடி5அங்குலம் உயரம் கொண்ட யானையே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Tagged in :

Admin Avatar

More for you