Tuesday, May 6, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் திலீபனின் நினைவேந்தலை தடுக்க பொலீசார் போட்ட வழக்கு!

முல்லைத்தீவில் திலீபனின் நினைவேந்தலை தடுக்க பொலீசார் போட்ட வழக்கு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் திலீபன் நினைவேந்தலை தடுக்க தடைவிதிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிலும் நீதவான் நீதிமன்றிலும் பொலீசாரால் இன்று 19.09.23 வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தல் ஊர்தி இன்று முல்லைத்தீவு மாவட்டத்தினை நோக்கி வந்துள்ள வேளை இந்த வழக்கு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலீசார்,முள்ளியவளை பொலீசார்,ஒட்டுசுட்டான் பொலீசார்,முல்லைத்தீவு பொலீசார் ஆகிய நான்கு பிரிவுகளும் திலீபனின் நினைவுதினைத்தினை நினைவிற்கொள்ளவிடாது தடைசெய்யகோரி இந்த வழங்கினை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்கள்.

இந்த வழக்கு பொருத்தமற்ற வழக்கு என தெரிவிக்கப்பட்டு நீதிமன்றினால் வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments