விவசாயிகள் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட இராணுவம்-கைலப்பாக மாறி இருவர் மருத்துவமனையில்!

விவசாயிகளின் குளத்தில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்- கைகலப்பில் இருவர் வைத்தியசாலையில்!

நன்னீர் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள வவுனியா கனகராஜன் குள பகுதியில் உள்ள கரப்பு குத்தி குளத்தினுள் அத்துமீறி மீன்பிடி  நடவடிக்கையில் ஈடுபட முயன்ற இராணுவத்தினருக்கும் , பொது அமைப்பினருக்கிமிடையில் இடம்பெற்ற கைகலப்பில் இருவர் மாங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்   குறித்த  சம்பவம் நேற்று 12.09.23 இரவு இடம்பெற்றுள்ளது 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது……..கரப்புக்குத்தியில் அமைந்துள்ள குளத்தில்  மீன்பிடிப்பதற்காக விலைக்கோரல் அடிப்படையில் குறித்த கிராமத்தைச்சேர்ந்த ஒருவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில் கரப்புக்குத்தி ராணுவ முகாமைச்சேர்ந்த ராணுவத்தினர் வலைகளைப்போட்டு சட்டவிரோதமாக குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நிலையில் குளத்தினை மீன்பிடிப்பதற்காக குத்தகைக்கு எடுத்தவர்களால் மீன்பிடிக்க வேண்டாம் என ராணுவத்திற்கு தெரியப்படுத்தியபோதும் நேற்று இரவு 9.00மணியளவில் மீளவும் ராணுவத்தினர் வாள்கள் கொண்டு மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்து அப்பகுதிக்கு சென்ற குளத்தினை குத்தகைக்கு எடுத்த பயனாளியும் அவரது நண்பரும் மீன்பிடிக்க வேண்டாம் என ராணுவத்தை மறித்த போது கையிலிருந்த வாள்களால் முதுகிலும் முள்ளந்தண்டின் கீழ்பகுதியிலும் தாக்கப்பட்டு கரப்புக்குத்தியைச்சேர்ந்த சிறீதரன்-சுஜீபன் (29) எனும் இளைஞன் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் 

இதேவேளை இராணுவத்தை  சேர்ந்த ஒருவரும் மாங்குள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்  மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Tagged in :

Admin Avatar

More for you