Monday, May 5, 2025
HomeUncategorizedமுள்ளியவளை பகுதியில் இருவேறு இடங்களில் வாள்வெட்டு!

முள்ளியவளை பகுதியில் இருவேறு இடங்களில் வாள்வெட்டு!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இருவேறு பகுதிகளில் வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முள்ளியவளை பகுதியில் குடும்ப தகராறு காரணமாக இளைஞன் ஒருவன்வீடு புகுந்து குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டு படுகாயப்படுத்தியுள்ளான்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வாளால் வெட்டிய இளைஞனை முள்ளியவளை பொலீசார் தேடிவருகின்றார்கள்.

இதேவேளை புதறிகுடாபகுதியில் வெட்டுக்காயத்திற்கு இலக்கான ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments