Friday, May 2, 2025
HomeUncategorizedகள்ளப்பாடு தெற்கில் போதைக்கு அடிமையான நால்வர் கைது!

கள்ளப்பாடு தெற்கில் போதைக்கு அடிமையான நால்வர் கைது!

09.08.23 முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு கிராமத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் உள்ளிட்ட நால்வர் குடுபாவனையில் ஈடுபட்டிருந்த வேளை முல்லைத்தீவு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் கஞ்சா குடு போன்ற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசார் குறித்த மருத்துவபரிசோதனை மேற்கொள்ள முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

இதன்போது இவர்கள் நால்வரும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளதை தொடர்ந்து குறித்த நால்வரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments