புதுக்குடியிருப்பில் வெடிப்பு சம்பவம்-இளைஞன் காயம்!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் பகுதியில் தோட்ட காணியினை துப்பரவு செய்து தீ மூட்டிக்கொண்டிருந்த போது தீ பற்ற வைத்த பகுதியில் இருந்து வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இதன்போது 21 அகவையுடைய இளைஞன் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளரால் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இன்று காலை இடம் பெற்ற இந்த சம்பவத்தினை தொடர்ந்து தோட்ட காணியினை பொலீசார் சென்று பார்வையிட்டுள்ளதுடன் வெடிப்பு இடம்பெற்ற இடத்தினையும் பார்வையிட்டுள்ளார்கள்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *