முல்லைத்தீவில் ரவிகரன்,பீற்றர் இளஞ்செழியனுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள்!


முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றம் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் முல்லைத்தீவு மற்றும் தண்ணீரூற்று பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

அண்மையில் குருந்தூர் மலை விவகாரத்தில் அதன் உரிமை மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட து.ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கு எதிராக ஒருசிலர் செயற்பட்டுள்ளமைகயினை காணக்கூடியதாக இருக்கின்றது இவர்கள் இராணுவ புலனாய்வாளர்களின் பின்னணியில் செயற்படுகின்றார்காள என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .

இந்த நிலையில் இன்று முல்லைத்தீவு,தண்ணீரூற்று பகுதிகளில் ஒட்டப்பட்ட துண்டு பிரசுரங்களில் இந்து மற்றும் பௌத்த மத நல்லிணக்கத்தினை குலைக்க ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியன் வெளிநாட்டில் இருந்து பணத்தினை பெற்றுக்கொண்டு தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள் மக்கள் சிந்தித்து செயற்படவும் என்று எழுதப்பட்டுள்ளது.

தற்போது குருந்தூர் மலை விவகாரம் மற்றும் மனித புதைகுழிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இனம் காணப்பட்டு பேசுபொருளாக காணப்படும் நிலையில் இந்த இடங்களுக்கு நேரடியாக சென்று தமிழர்களின் உரிமையினை வலியுறுத்திவருபவர்களில் முக்கியமாக இருவரும் அடங்கு கின்றார்கள் அவர்களின் செயற்பாட்டினை முடக்குவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *