Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News கிளிநொச்சி

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

கிளிநொச்சி அக்கராயன் பகுதி வன்னேரிக்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கில்கள் மேதிக்கொண்டதில் படுகாயமடைந்த இருவாரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

34 அகவையுடைய வசந்தறூபன் சுமன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஒருவர் கிளிநொச்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் அக்கராயன் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *