Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Uncategorized

யாழில் புலம்பெயர் தமிழரின் முதலீட்டில் மருந்து உற்பத்தி நிலையம்!

வடக்கில் புலம்பெயர் தமிழர் ஒருவரின் பாரிய முதலீட்டுடன் ஊட்டச்சத்து மற்றும் மருந்து உற்பத்தி நிலையம் ஒன்று நாளை (09.03.2024) திறந்துவைக்கப்படவுள்ளது.

வட மாகாணத்தில்  முதல்முறையாக    ஊட்டச்சத்து மற்றும் மருந்து உற்பத்தி வசதியை  அறிமுகம் செய்கின்றது Biotech Company Metabology SL.இந்தத் தொழில் முயற்சிக்காக சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்துள்ள  Biotech Company Metabology SL நிறுவனம், யாழ்ப்பாணத்தில் உள்ள இளையோருக்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதையும், உள்ளூர் விளைபொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பையும் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும், பிரித்தானியாவில் பிறந்தவருமான அர்னன் மனோஜ் ஜோஹில் என்ற இளைஞரே Biotech Company Metabology SL நிறுவனத்தின் தலைமை அதிகாரி. பிரித்தானியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திவரும் அர்னன் மனோஜ் ஜோஹில் , ஊட்டச்சத்து மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனத்தையும் ஆரம்பித்து, அந்தத் துறையிலும் கோலோச்சத் தொடங்கியுள்ளார். வருடமொன்று சுமார் 104 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானத்தை ஈட்டும் Biotech Company Metabology SL நிறுவனத்தின் தலைமை அதிகாரியான அர்னன் மனோஜ் ஜோஹில், தன் பூர்வீக தேசத்தில் தனது நிறுவனத்தின் கிளையைத் திறந்து, , தன் இன மக்களுக்கு தொழில்வாய்ப்பினையும், உள்ளூர் விளைபொருட்களுக்கான சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்த எண்ணினார். அதன் விளைவாக,  யாழ்ப்பாணத்தில் நாளை (09.03.2024) திறந்துவைக்கப்படவுள்ளது. Biotech Company Metabology SL நிறுவனத்தின் கிளை.

இந்தக் கிளையை வடக்கு மாகாணத்தில் நிறுவும் நடவடிக்கைகள் 2022 ஆம் ஆண்டே ஆரம்பமாகிவிட்டன. 2023 ஆம் ஆண்டு இதன் பூர்வாங்கப் பணிகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, தொழிற்சாலைக்கான நவீன உபகரணங்கள் யாவும்  பிரித்தானியாவிலிருந்து நேரடியாக, மிகுந்த பொருட்செலவின் மத்தியில் தருவிக்கப்பட்டு, பொருத்தப்பட்டன.

சர்வதேசத் தரம் வாய்ந்த மருந்துகளையும், ஊட்டச்சத்து மாத்திரைகளையும் இயற்கையில் விளையும் நம் உள்ளூர்ப் பழங்கள், மூலிகைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரித்து ஏற்றுமதி செய்வதே  Biotech Company Metabology SL நிறுவனத்தின் இலக்காக இருக்கின்றது. இந்தத் திட்டத்தினை அடுத்தபடிநிலைக்கு கொண்டு செல்லவும், விரிவுபடுத்தவும்  முதலீட்டுச் சபை அந்தஸ்தைப் பெறும் முயற்சியில் நாட்டில் உள்ள பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள்,பங்குதாரர்களோடு  Biotech Company Metabology SL ஆலோசித்து வருகின்றது.  இந்த நிறுவனத்தின் மூலம் நமது பிரதேசத்திலேயே சர்வதேசத் தரம் வாய்ந்த மருந்துகள், ஊட்டச்சத்து மாத்திரைகளை நாம் உற்பத்தி செய்யமுடியும். அத்தோடு இலங்கையர்கள் யாவரும்  Biotech Company Metabology SL நிறுவனத்தின் உற்பத்திகளை மானிய விலையிலும் பெற்றுக்கொள்ளமுடியும். பொருளாதார நெருக்கடியால், இலங்கையில் மருந்துவகைகளுக்கு பெரும் நெருக்கடி நிலவும் இந்தக் காலகட்டத்தில் மானிய விலையில் சர்வதேசத் தரம் வாய்ந்த மருந்துவகைகளையும், ஊட்டச்சத்து மாத்திரைகளையும்  பெறுவதென்பது ஒரு வரப்பிரசாதமே.

உலகளாவியரீதியில் இப்போது சீனாவும், இந்தியாவுமே மருந்துவகைகளை விநியோகிப்பதில் முன்னணியில் திகழ்கின்றன. இந்தநிலையில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள Biotech Company Metabology SL நிறுவனம், அந்தப் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கும் முயற்சியை முன்னெடுக்கும்.

“அடுத்த தலைமுறையினர்  சுகாதாரம் மற்றும் மருந்து உற்பத்தி மூலம்   செயல்படும் வணிகத்துக்கான அடித்தளத்தை நாங்கள் உருவாக்குகிறோம். இந்த  முதலீடு இலங்கையர்களின் கைகளில் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான சக்தியை வழங்குவதற்கான வளங்களை எமக்கு வழங்குகிறது, அதே வேளையில் உலகளாவிய விளையாட்டுத்துறையினரிடையே  ’பயோடெக்’ துறையில் வலுவான அடித்தளத்தை உருவாக்க தேவையான திறமைகளையும் ஈர்க்கும்.” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்  Biotech Company Metabology SL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அர்னன் மனோஜ் ஜோஹில்.

இலங்கையர்களாக,தமிழர்களாக நாம் உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பெருமிதம் கொள்ளும் வாய்ப்பை Biotech Company Metabology SL நிறுவனம்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *