முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாடு!

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியின் மாநாடு ஒன்று இன்று மாலை முல்லைத்தீவில் இடம்பெற்றது

குறித்த மாநாடு இன்று (13.06.2024) மாலை 6.30 மணிக்கு சுனில் ஹந்துநெத்தி தலைமையில் முல்லைத்தீவு நகரில் உள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில்  இடம்பெற்றது  .

நிகழ்வில், சுனில் ஹந்துநெத்தி,ராமலிங்கம் சந்திரசேகரன், சமீர அல்விஸ், வாகீஷ், சதானந்தம் நேசராஜன், பூலோகராஜா சிறீதரன்.  உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சமகால அரசியல் தொடர்பில் மாநாட்டில் உரையாற்றினர்.

முல்லைத்தீவில் உள்ள வங்கி மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலரை ஒருங்கிணைத்து குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

Admin Avatar