Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் வாள்வெட்டு குழு புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து ஹயஸ் வாகனத்துடன் கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பணை பொலீஸ் நிலையத்திற்கு அருகில் கடந்த 04.12.2023 அன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர் மற்றும் ஹயஸ் வாகனம் என்பன புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வைத்து பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளர்கள்.

தெல்லிப்பணை பொலீஸ் நிலையத்திற்கு அருகில் கடந்த திங்கட்கிழமை(04) ஹயஸ் வாகனத்தில் வந்த இனம் தெரியாத குழு மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டுதாக்குதலை நடத்தி இருந்தார்கள்.

இதன்போது காயமடைந்த 28 அகவையுடைய இளைஞன் தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஹயஸ் வாகனத்தில் வந்த வாள்வெட்டுகுழுவினை பிடிப்பதற்காக பொலீசார் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார்கள்.

இந்த நிலையில் வாள்களை போட்டுவிட்டு ஹயஸ் வாகனத்தில் தப்பிசென்ற வாள்வெட்டுக்குழுவினை பிடிப்பதற்காக யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளில் ஈடுபட்டு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில் இன்று 06.12.2023 அதிகாலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து மூவரையும் ஹயஸ் வாகனத்தினையும் பிடித்துள்ளார்கள்.

வாகனத்தின் உரிமையாளர் கைவேலி பகுதியினை சேர்ந்தவர்கள் இவர் வள்ளிபுனம் பகுதியில் வைத்து வாகனத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வள்ளிபுனம் கைவேலி,பகுதிகளை சேர்ந்த மேலும் இருவரை கைது செய்துள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களையம்,வாகனத்தினையும் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவு பொலீசார் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவுகளில் தலைமறைவாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. மல்லாகம் பகுதியினை சேர்ந்த ஒருவரும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு தலைமறைவாகி உள்ளார்கள் இவர்களை தேடும் நடவடிக்கையில் யாழ்ப்பாண பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பொலீசார் இந்த சம்பவம் தொடர்பில் அவதானித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *