Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

மூன்று நாட்கள் நடைபெறும் முல்லைத்தீவு அபிவிருத்தி கூட்டங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழுக்கூட்டம் 14 இன்று தொடக்கம் 16 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

14.02.2024 இன்று முல்லைத்தீவுமாவட்டத்தின் வெலிஓயா பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் காலை 9.30 மணிக்கும்,கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் நண்பகல் 12.00மணிக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் மாலை 3.00 மணிக்கும் நடைபெற்று வருகின்றது.

15.02.2024 திகதி காலை 9.00 மணிக்கு துணுக்காய் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டமும் நண்பல் 12.00 மணிக்கு மாந்தை கிழக்கு அபிவிருத்திக்குழுக்கூட்டமும்,மாலை3.00 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டமும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் எதிர்வரும் 16.02.2024 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் இந்த அபிவிருத்திக்குழுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதுடன் பிரதேச செயலலாளர் திணைக்கள அதிகாரிகள் பொலீசார்,படையினர் பொது அமைப்புக்களின் பங்கெடுப்புடன் நடைபெறவுள்ளது.

மூன்று நாட்களில் மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுக்கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதுடன் நாள் ஒன்றுக்கு மூன்று பிரதேச அபிவிருத்திக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் கேட்டறிந்து திட்மிடுவார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *