Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முள்ளியவளை புதறிகுடா நீர்தேக்கத்தில் இருந்து உடலம் மீட்பு!

முல்லைத்தீவு முள்ளிவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட புதறிகுடா பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்து உடலம் ஒன்று இன்று 04.05.2024 மீட்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை புதறிகுடா நீர்தேக்கத்தில் இருந்து உயிரிழந்த நிலையில் வயோதிபர் ஒருவரின் உடலம் காணப்படுவதாக முள்ளியவளை பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று இரவு குறித்த பகுதிக்கு சென்ற பொலீசார் உடலத்தினை மீட்டுள்ளார்கள்.

தண்ணீரூற்று கிழக்கு முள்ளியவளையினை சேர்ந்த 53 அகவையுடைய செல்வராசா மணிமாறன் என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது உடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இவரது உயிரிழப்பு தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

புதறிகுடா பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனைசெய்து வருவதாகவும் இதனை நுகர்பவர்கள் இவ்வாறு கடந்த காலங்களில் புதறிகுடா நீர்தேக்கத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *