Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவில் வளரி அணிக்கான சீருடை கீதம் வெளியீட்டுவைப்பு!

முல்லைத்தீவில் வளரி அணிக்கான சீருடை கீதம் வெளியீட்டுவைப்பு!

முல்லைத்தீவினை தளமாக கொண்ட வளரி விளையாட்டு அணிக்கான சீருடை அறிமுகமும் கீதம் வெளியீட்டு நிகழ்வும் கடந்த 09.06.2024 அன்று முல்லைத்தீவு மகாவித்தியால விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

வளரி அணியின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக சிவாகம கிரியாதிலகம் வை.கு.ஜெயசுதாக்குருக்கள் அவர்களும் மற்றும் உளநல ஆலோசகருமான ஈழத்து எழுத்தாளர் வவுனியூர் ரஜீவன் மற்றும் திருமதி அஜந்தினி ரஜீவன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

வளரி விளையாட்டுக்கழகத்தின் கீதத்தினை சிறப்பு விருந்தினர் வெளியீட்டுவைக்க தொடர்ந்து வளரி கழகத்தின் சீருடையினை பாராளுமன்ற உறுப்பினர் அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

இந்நிகழ்வில் றெஜிஸ் றெஜிஸ்ரிகாவின் நடனமும் இடம்பெற்ற நிகழ்வில் கிராம மக்கள், கிராம மட்ட அமைப்புகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *