Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவில் போதைப்பொருள் கட்டுப்படுத்தும் நடவடிக்கை புதுக்குடியிருப்பில் அதிகளவானவர்கள் கைது!

பொலீசாரின் போதை கட்டுப்படுத்தல் நடவடிக்கை இதுவரை 31 பேர் கைது!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து போதைப்பொருள் விற்பனை மற்றும் நூகர்வேரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலேயே அதிகளவானவர்கள் கைதாகியுள்ளார்கள்.
ஒரு பெண் உள்ளிட்ட 31 பேர் இவ்வாறு போதைப்பொருட்களான கஞ்சா,கசிப்பு.ஊசி,மாத்திரை போன்றவற்றை விற்பனை செய்பவர்களும் அதற்கு அடிமையானவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவர்களுக்கு புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பிவைக்க சட்டவைத்திய அதிகாரி பரிந்துரை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *