Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் குழிசை வியாபாரி கைது!

புதுக்குடியிருப்பில் முக்கிய போதை மாத்திரை வியாபாரி போலீசாரால் மடக்கி பிடிப்பு!


புதுக்குடியிருப்பு பகுதியில் இளைஞர்களையும் பாடசாலை மாணவர்களையும் இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரம் செய்து வரும் முக்கிய சந்தேக நபர் 300 போதை மாத்திரைகளுடன் புதுக்குடியிருப்பு போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த சந்தேக நபர் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இன்று போலீசார் மேற்கொண்ட திடீர் சுத்திவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் 300 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்
இவரை போலீசார் கைது செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும் போலீசாரின் பிடியிலிருந்து தப்பி செல்ல முற்பட்டு போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
புதுக் குடியிருப்பு நேசன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 29 அகவைஉடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் ஒரு போதை மாத்திரையின் விலை 250 ரூபாய் விற்கு நகர் பகுதியில் இவர் விற்பனை செய்து வந்துள்ளார்

குறித்த சந்தேக நபர் புது குடியிருப்பு பகுதியில் பல்வேறுபட்ட இடங்களில் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது
சந்தேக நபரையும் போதை மாத்திரைகளையும் நீதிமன்றத்தில் முற்படுத்தி நடவடிக்கையில் புதுக் குடியிருப்பு போலீசார் ஈடுபட்டுள்ளார்கள்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *