Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News கிளிநொச்சி முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பினை சேர்ந்த இருவர் பூநகரியில் வெடிபொருட்களுடன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த இருவர் பூநகரிபகுதியில் வெடிபொருட்களுடன் கிளிநொச்சி பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் 07.04.2024 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு வள்ளுவர்புரம் றெட்பான விசுவமடுவினை சேர்ந்த 22 அகவையுடைய நபர் மற்றும் குரவில் உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நபர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களிடம் இருந்து ரி.என்.ரி வகை வெடிபொருள் 3.8 கிலோகிரம்,சி-4 வகை வெடிபொருள் 4.4 கிலோக்கிரம் என்பனமீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கிளிநொச்சி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னிலை;படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *