Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முள்ளியவளை  புதாரிகுடாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள் அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்கள்

 முள்ளியவளை பகுதியில் நேற்று கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று(20) சட்டவிரோதமாக கசிப்புக் காச்சி விற்பனை செய்யும் ஒரு இடம் ஒன்று முற்றுகை இடப்பட்டு பெருமளவான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் இந்த நடவடிக்கையில் 9 பரல்கள் மற்றும் கசிப்புக் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன இதன் போது மீட்க்கப்பட்டுள்ளன குறித்த பகுதியில் ரகசியமான முறையில் கசிப்பு காச்சி வெளியிடங்களுக்கு விநியோகித்து வரும் குறித்த பகுதியே போலீசாரின் சிறப்பு அதிரடிப்படையினரின் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது மீட்கப்பட்ட பொருட்களையும் சான்று பொருட்களையும் மாவட்ட நீதிமன்றத்தில் முன்ப்படுத்தீம் நடவடிக்கையில் முள்ளியவளை போலீசார் ஈடுபட்டுள்ளார்கள்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *