Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரவு 01.03.2024 இடம்பெற்ற விபத்தில் செம்மலையினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அளம்பில் பகுதியில் மோட்டார் சைக்கில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிய விபத்தில் செம்மலை பகுதியினை சேர்ந்த நாகரத்தினம் யோகராசா என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் மற்றும் காயமடைந்தவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *