Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் நன்கு உடும்புகளுடன் மூவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக காட்டில் உடும்புகளை இறச்சிக்காக பிடித்த மூவரை உடும்புகளுடன் புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

25.02.2024 இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

புதுக்குடியிருப்பு கைவேலி 1ஆம் வட்டாரப்பகுதியில் காட்டில் உடும்புகளை வேட்டையாடி வருவதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த காட்டுப்பகுதியில் உடும்புகளை பிடித்து இறச்சிக்காக விற்பனை செய்யமுற்பட்ட  27,27,55 அகவையுடைய மூவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

அவர்களிடம் இருந்து நான்கு உடும்புகள் மீட்கப்பட்டுள்ளன சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் புதுக்குடியிருப்பு பொலீசார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *