Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

கொக்குளாய் பகுதியில் படகு இயந்திரங்களை திருடிய நபர்கள்!

முல்லைத்தீவு கொக்குளாய் புளியமுனைப்பகுதியில் கடற்தொழில் செய்துவரும் கடற்தொழிலாளர்களின் இரண்டு படகுகளின் வெளியிணைப்பு இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

புளியமுனை கடற்கரை பகுதியில் வாடியில் வைத்த இரண்டு படகுகளே இவ்வாறு 27.03.2024 அன்று இரவு களவாடப்பட்டுள்ளதாக 28.03.2024 அன்று கொக்குளாய் பொலீஸ் நிலையத்தில் படகின் உரிமையாளரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தலா 9 இலட்சம் பெறுமதியான படகுவெளியிணைப்பு இயந்திரங்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.

கடற்தொழிலை நம்பி வாழ்ந்துவரும் நிலையில் இவ்வாறன களவாடப்பட்ட சம்பவத்தினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *