Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரமந்தனாற்றுப் பகுதியில் மீட்பு!

விசுவமடுவில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரமந்தனாற்றுப் பகுதியில் மீட்பு!

முல்லைத்தீவு விஸ்வமாடு தொட்டியடி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(18) நடைபெற்ற மாட்டு வண்டி சவாரியை பார்க்கச் சென்ற நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பூட்டிவிட்டு மாட்டுவண்டி சவாரியை பார்த்துக் கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிலை காணாத நிலையில் குறித்த நபர் புதுக்குடியிருப்பு போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் இந்த முறைப்பாட்டுக்கு அமைய பபொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு பிரமந்தனாற்று பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது

 இந்த களவாடப்பட்ட சந்தேகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இவர்களை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி நடவடிக்கையில் புது குடியிருப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *