இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையத்தால் – விவாத போட்டி!

இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையத்தால் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான விவாத போட்டி

இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடிநீரை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது 

அந்தவகையில் தற்போது இலங்கையில் வெள்ள மற்றும் வறட்சி ஏற்படும் பிரதேச மக்களுக்கான சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுத்தல் எனும் செயற்றிட்டத்தின் கீழ் USAID இன் அனுசரணையுடன்  இயங்கி வருகிறது. 

இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களிடையே மழை நீர் சேகரிப்பின்  முக்கியத்துவத்தினை அறிவூட்டும் முகமாக  மழை நீர் சேகரிப்பு தொடர்பான விவாதப்போட்டியினை ஏற்பாடு செய்துள்ளது.

அதற்கமைவாக வடமாகாணத்தின் மன்னார்  மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து மழை நீர் சேகரிப்பு தாங்கிகள் மூலம் பயனடைந்த 24 பாடசாலை மாணவர்கள் இப்போட்டியில் பங்குபெறவுள்ளனர்

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலையத்திற்குற்பட்ட 12 பாடசாலைகளுக்கு இடையிலான முதலாம் சுற்று வினாடி வினா போட்டி இன்றைய தினம் மாங்குளத்தில் அமைந்துள்ள துணுக்காய் வலய கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது 

நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் இலங்கை மழைநீர் சேகரிப்பு ஒன்றிய முகாமையாளர்,  மற்றும் வலயக்கல்வி பிரதி பணிப்பாளர் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்இதனுடைய அடுத்த சுற்று போட்டிகளும் இடம் பெறவுள்ளதோடு இன்று போட்டியில் பங்குபற்றிய  மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Admin Avatar