Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

தண்ணீரூற்றில் முதன்மை வணிக நிலையம் ஒன்றில் பாரிய கொள்ளை!

முல்லைத்தீவு தண்ணீரூற்று நகர்பகுதியில் அமைந்துள்ள பாரியளவிலான வணிக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கடந்த 15.11.2023 அன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் கடந்த 15.11.2023 அன்று வணிக நிலையத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கொள்ளையர்கள் கதவின் பூட்டினை உடைத்து கடைக்குள் நுளைந்துள்ளார்கள். கடைக்குள் நுளைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 19 பண்டல் சிகரட் பெட்டிகளை…

வெள்ளத்தில் மூழ்கிய புதுக்குடியிருப்பு நகரம்!

வெள்ளத்தில் மூழ்கிய புதுக்குடியிருப்பு நகரம்-8 குடும்பங்கள் பாதிப்பு பல வணிக நிலையங்கள் வீடுகளுக்குள் மழை வெள்ளம் ! புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மழை வெள்ளத்தினால் 8 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார் நேற்றிரவு( 16)பெய்த கடும் மழையினால் புதுக் குடியிருப்பு நகர்ப்பகுதி உள்ளிட்ட மக்களின் குடியிருப்பு பகுதிகள் வணிக நிலையங்கள்…

தானாக உடைப்பெடுத்த நந்திக்கடல் நீர் ஏரி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் மழையினால் நந்திக்கடலுக்கான நீர்வரத்து அதிகமாக காணப்பட்டுள்ளதை தொடர்ந்து வெட்டுவாகல் ஊடகான நந்திக்கடல் முகத்துவாரம் தானக உடைப்பெடுத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முறிப்பு குளம் வான்பாய்கின்ற நிலையில் முத்தையன் கட்டு குளத்தின் கீழான பேராற்று நீரும் நந்திக்கடலை சென்றடைந்துகொண்டிருக்கின்றது. அதிகளவான மழைவீழ்ச்சியால் நந்திக்கடலுக்கான மழைவெள்ள நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டுள்ளதை தொடர்ந்து…

கட்சியின் மறைந்த மாவட்ட அமைப்பாளருக்கு தேசப்பற்றாளர் கௌரவம் வழங்கி மதிப்பளிப்பு!

தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இருந்து உடல் நல குறைவால் 14.11.2023 அன்று மறைந்த கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்களுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்ணியினரால் தேசப்பற்றாளர் என்ற கட்சியின் உயரிய விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளராகவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னால் உறுப்பினராக இருந்து உயிரிழந்த…

பாண்டியன்குளத்தில்  ஒரின பாலியல் துஸ்பிரயோகம் தனியார் வாத்தி கைது!

முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் வாத்தி ஒருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் கணிதபாடத்தில் சிறப்புதேர்ச்சி பெற்ற வாத்தி ஒருவர் மாணவர்கள் மத்தியில் கணிதபாடம் கற்பிப்பதில் சிறப்பான…

முல்லைத்தீவில்-முறிப்பு குளம் வான்பாய்கின்றது!

முல்லைத்தீவில் தொடர்சியாக பெய்துவரும் மழை காரணமாக கணுக்கேணிக்குளம்(முறிப்பு)வான்பாய்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திலும் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகிவருகின்றது.இந்த நிலையில் முள்ளியவளை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட கணுக்கேணி குளம் எனப்படும் முறிப்பு குளம் வான்பாயதொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை நீடிக்குமாயின் நீர்வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பாக்கப்படுகின்றது. பாதிப்பு ஏற்படக்கூடிய மக்கள் வாழும் பகுதிகளில் முன்எச்சரிக்கையுடன்…

 உத்தியோகத்தர்களுக்கான கணினித் திறன் விருத்திப்பயிற்சி! 

முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லயன் வைத்தியர் கிரிஜகலா அவர்களின் நெறிப்படுத்தலில் முல்லைமாவட்டகால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்குட்பட்ட  20  உத்தியோகத்தர்களுக்கான கணினித் திறன் விருத்திப்பயிற்சி நெறி (முழுநேரம்) கடந்த இரு நாட்களாக மல்லாவி தொழில்நுட்ப கலை கலாசாரம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் பயிற்சி…

முல்லைத்தீவில் சட்டவிரோத கருக்கலைப்பு மூவர்கைது!

முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் 13 அகவை சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால் சிறுமி கர்பம் தரித்த நிலையில் குறித்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் 13.11.23 அன்று முல்லைத்தீவு பொலீசில்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு! உறவுகள் கடும் கண்டணம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர் சர்வதேச விசாரணையே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி எமக்கு தேவையில்லை எனவும் நீதியே வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க…

முன்னால் பிரதேச சபை உறுப்பினர் க.விஜயகுமார் காலமானார்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னால் உறுப்பினராகவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளராகவும் செயற்பட்ட விஜயகுமார் 14.11.23 அன்று காலமானார். தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராக செயற்பட்ட விஜயகுமார் அவர்கள் முன்னணியின் பிரதேச சபையின் உறுப்பினராகவும் செயற்பட்டார். இந்த நிலையில் நோய் வாய்ப்பட்ட அவர் யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பெற்றுவந்துள்ளநிலையில்…