Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

வடக்கில் சீனாவின் பிரசன்னம் ஆமை புகுந்த வீடாக மாறும் இலங்கை!

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது மெல்ல மெல்ல தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்திலும் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவதை சீன தூதுவர் வவுனியாவிற்கு விஜயம் செய்து  வவுனியா மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தமை மூலம் மேலும் உறுதியாகியுள்ளது. இவர்களது திடீர் அக்கறை காலம் காலமாக…

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுவிழ!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச சபை மற்றும் கலாச்சார பேரவை இணைந்து நடாத்தும் 2023 ம் ஆண்டுக்கான கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டு விழா இன்று நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி உமாமகள் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற பண்பாட்டு…

மாணன் ஒருவரை புலமைபரிசில் எழுதவிடாமல் தடுத்த பாடசாலை நிர்வாகம்! 

தமது பெருமைக்காகவும் பாடசாலை பெயரை காப்பாற்றுவதாகவும்  மாணன் ஒருவரை புலமைபரிசில் எழுதவிடாமல் தடுத்த பாடசாலை நிர்வாகம்! மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கோம்பாவில்  பாடசாலையில் தரம் 5 இல் கல்விகற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவன் வயிற்றில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட காரணத்தினால் இரண்டு மாதங்கள்  பாடசாலை செல்லவில்லை…

கற்பூரப்புல் இந்து மயான வீதி மற்றும் மயானம் என்பன சுத்தம் செய்யும் பணி!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளியவளை கிழக்கு அபிவிருத்தி சங்கத்தின் எல்லைக்குட்பட்ட கற்பூரப்புல் இந்து மயானத்திற்கு செல்லும் வீதி மற்றும் மயானம் என்பன பிரதேச சபையின் உதவியுடன் புனரமைப்பு பணிகள் செய்துவைக்கப்பட்டுள்ளன. மழைகாலம் தொடங்கியுள்ளதால் குறித்த மயானத்திற்கு செல்லும் வீதி பற்றைக்காடுகளாக காணப்படுவதுடன் மயானமும் பற்றைகளால் காணப்படுவதை கருத்தில் கொண்டு முள்ளியவளை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின்…

இன்று இரவு இடிமின்னலுடன் மழை!

20 மாவட்டங்களுக்கு கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாயங்கள் ஆரம்ப எச்சரிக்கை மையம் இன்று தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய…

மாங்குளத்தில் பாடசாலை சென்ற சிறுமியை காணவில்லை!

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைக்கு சென்ற 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது அவரது தாயாரால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி ஒருவர்…

முல்லைத்தீவில் தொடங்கிய உலக சாதனை நிகழ்வு!

முல்லைத்தீவில் தொடங்கிய உலக சாதனை நிகழ்வு! சர்வதேச வாரியர்ஸ் உலக சாதனை புத்தகம் டான்ஸ் மராத்தான் என்ற  உலக சாதனை முயற்சி 128 மணிநேரம் தொடர்ந்து நடனமாடும்  (டான்ஸ் மரதன் ) முல்லைத்தீவு துணுக்காய்  பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது 05.11.2023 ஞாயிறு  அன்று காலை 10.00 மணிக்கு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள தொழில்நுட்ப அழகியல் கலாச்சாரம்…

முல்லைத்தீவில் 500 குடும்பங்களுக்கு சீனாவின் உலர் உணவுப்பதிகள்!

இலங்கை எவ்வாறான சவால்களை சந்திக்க நேரிடுதோ அவ்வாறான நிலையில் சீன மக்களும் சீன அரசாங்கமும் இலங்கைக்கு கை கொடுக்க தயாராக உள்ளார்கள்- இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவிப்பு! பௌத்த விகாரைகள் மற்றும் சீனாவின் பௌத்த மக்களால் இலங்கையில் உள்ள ஏழை மக்களுக்கான உலர் உணவு நன்கொடை வழங்கு நிகழ்வு சீன பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று…

தேராவில்-வீட்டில் பெண்களை 🗡️ கத்தி முனையில் அச்சுறுத்தி கொள்ளை!

தேராவில் கிராமத்தில் துணிகரக் கொள்ளை 10 லட்சத்துக்கும் அதிக சொத்துக்கள் சூறையாடல்!முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேராவில் ஏரிக்கரை பகுதியில் வீட்டில் இருந்த பெண்களை பயமுறுத்தி பணம் நகை  உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று இரவு (04-11-23) நடைபெற்று உள்ளது வீட்டில் வயோதிபத்தாய் மற்றும் பெண் அவரது மகள் ஆகியோர் இருந்த…

குரவில் கிராமத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் மூவர் காயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குரவில் கிராமத்தில் இன்று 04.11.2023 இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூன்று சககோதரர்கள் காயமடைந்துள்ளார்கள். மாலை வேளை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது இதன்போது மின்னல் தாக்குதல் குரவில் கிராமத்தில் பதிவாகியுள்ளது வீட்டின் மின்சார இணைப்பு ஊடாக மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது இதன்;போது வீட்டில்…