மான்னுருவி பகுதியில் அரைக்கும் ஆலையினை அரைத்து தள்ளிய யானை!


முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மான்னுருவி பகுதியில் நாகரத்தினம் பாஸ்கரன் என்பவரின் அரைக்கும் ஆலைக்குள்  யானை புகுந்து துவம்சம் செய்துள்ளது.

குறித்த பகுதியில் அரைக்கும் ஆலைவைத்து தமது வாழ்வாதாரத்தினை கொண்டு நடத்திய நபரின் அரைக்கும் ஆலைக்குள் நேற்று 19.03.23 இரவு புகுந்த காட்டுயானை அரைக்கும் ஆலையின் ஒருபகுதி சுவரினை உடைத்து வீழ்ந்தியுள்ளதுடன் மா அரைக்கும் இயந்திரம் மற்றும் தூள் அரைக்கும் இயந்திரம் மற்றும் மின்னார இணைப்புக்களை சேதப்படுத்தியுள்ளது.

சுமார் 5 இலட்சம் பெறுமதியான சொத்துக்களுக்க சேதம் விளைவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *