Saturday, January 31, 2026
HomeUncategorizedஒட்டுசுட்டானில் தீ பற்றி எரிந்து சாம்பலான மோட்டார்சைக்கில்!

ஒட்டுசுட்டானில் தீ பற்றி எரிந்து சாம்பலான மோட்டார்சைக்கில்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் வீதியில் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்த வேளை வெடிப்பு சத்தம் கேட்டுள்ளதை தொடர்ந்து உந்துருளி தீப்பற்றிக்கொண்டுள்ளது.

ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பகுதியில் உள்ள நவீனம் கள்ளுத்தவறனைக்கு அருகில் உள்ள கொங்கிறீட் வீதியில் இன்று 14.06.23 மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்களுக்கான உந்துருளி ஒன்றில் தயார் தனது மகனை ஏற்றி ஓடிக்கொண்டு வரும்போது மோட்டார்சைக்கில் திடீரென வெடிப்பு சத்தம் ஒன்று கேட்டு தீ பற்றிக்கொண்டுள்ளது

இதன்போது மோட்டார் சைக்கில் முற்றுமுழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதில் பயணித்த தாயும் மகனும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments