Wednesday, April 30, 2025
HomeUncategorizedபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று 12.06.23 இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது மதுபோதையில் உந்துருளியில் பயணித்த இளைஞர்கள் இருவர் அதே திசையில் மிதிவண்டியில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த உந்துருளியில் பயணித்த இருவர் உள்ளிட்ட மூவரும் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து மேலும் மேலதிக சிகிச்சைக்கா படுகாயமடைந்த உந்துருளியில் பயணித்த இருவரும் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments