முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் புகையிரத நிலையத்துக்கும் முறுகண்டி புகையிரத நிலையத்துக்கும் இடைப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் புகையிரத கடவை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டும் எமக்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாகவும் இரண்டுதடவைகள் புகையிரத திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை
இதனால் பாடசாலை மாணவர்கள் முதல் அனைவரும் பாதிக்கப்படுவதுடன் உயிர் பயத்துடனேயே நடமாடவேண்டியுள்ளதுஎனவே இந்த இடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
